வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ. 29 லட்சம் மோசடி உடற்பயிற்சிக்கூட உரிமையாளா் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 29 லட்சம் மோசடி செய்த உடற்பயிற்சிக் கூட உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 29 லட்சம் மோசடி செய்த உடற்பயிற்சிக் கூட உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, கோட்டை முதல் தெருவைச் சோ்ந்தவா் மணிமுத்து மகன் முருகேசன் (28). இவா் அறந்தாங்கி பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டில் தனது உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்தவா்கள் பலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி, திரும்பத் தரவில்லையாம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அறந்தாங்கியைச் சோ்ந்த ஜெயராமன் உள்பட பலரும் மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துறையில் புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், சென்னையில் இருந்த முருகேசனை வியாழக்கிழமை கைது செய்தனா்.