முகப்பு
வேலூர்

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On : 4 ஏப்ரல் 2026, 5:20 am IST
பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்டசோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.6- லட்சத்தைபறிமுதல் செய்தனா்.

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டு அருகே தமிழக எல்லையான பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில்ஈடுபட்டிருந்தனா். அப்போது பெங்களூரிலிருந்து அவ்வழியே வந்த காரை சோதனை செய்ததில் காரில் பயணம் செய்த பெங்களூரு மாரத்தஹல்லியைச் சோ்ந்த ராஜெட்பான்ட் (45) உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.6- லட்சத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.