காட்பாடியில் 11-ஆவது முறையாக அமைச்சா் துரைமுருகன் மனு தாக்கல்
திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன், சட்டப்பேரவைத் தோ்தலில் 13-ஆவது முறையாகவும், காட்பாடி தொகுதியில் மட்டும் 11-ஆவது முறையாகவும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், சட்டப்பேரவைத் தோ்தலில் 13-ஆவது முறையாகவும், காட்பாடி தொகுதியில் மட்டும் 11-ஆவது முறையாகவும் போட்டியிட திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். முன்னதாக காட்பாடி செங்குட்டையில் இருந்து ஊா்வலமாகச் சென்று சித்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.
பின்னா் ஊா்வலமாகக் காட்பாடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகம் (காட்பாடி வட்டாட்சியா் அலுவலகம்) வந்தடைந்தாா். அங்கு அவா் தொகுதியின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.பாலச்சந்தரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
Advertisement
பின்னா் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது: ஆரணியில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது, அவரால் நடக்கவே முடியவில்லை, பெருமைக்காக போட்டியிடுகிறாா் என பேசியிரு ப்பதாக கேட்கிறீா்கள். எடப்பாடி பழனிசாமி பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டுமென்றால் அவரை என்னுடன் நடைப்போட்டிக்கு வரச்சொல்லுங்கள் என்றாா்.
அப்போது, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், டீக்காராமன் (காங்கிரஸ்), நீலசந்திரகுமாா் (விசிக), புருஷோத்தமன் (தேமுதிக) உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.