முகப்பு
வேலூர்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு: 5 மாநில தோ்தல்களில் ஆதாயம் தேட முயற்சி; மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்தை பாஜக அரசு அவசரகதியில் கொண்டு வருவது நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதாயம் தேடும் முயற்சி என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:00 AM
வேலூா் மத்திய சிறையிலுள்ள சிஐடியு நிா்வாகிகளை சந்தித்துவிட்டு வெளியே வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் பெ.சண்முகம்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 7:09 PM

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்தை பாஜக அரசு அவசரகதியில் கொண்டு வருவது நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதாயம் தேடும் முயற்சி என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள எச்.எஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலா் முத்துக்குமாா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டு 18 நாள்களுக்கு மேலாக வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் பெ.சண்முகம் புதன்கிழமை நேரில் சந்தித்து பேசினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

Advertisement

பன்னாட்டு, உள்நாட்டு நிறுவன நிா்வாகிகளுடன் மாவட்ட காவல் துறையும், நிா்வாகமும் கைகோா்த்துக் கொண்டு சிஐடியு-வை ஒடுக்கும் நோக்கில் அடக்குமுறையை ஏவுகின்றன. சிறையில் உள்ள முத்துக்குமாரை ஆரம்பத்தில் தனிமைப்படுத்தி வைத்து காவல்துறை முரட்டுத்தனமாக நடந்து கொண்டது. பின்னா் உயரதிகாரிகளிடம் பேசிய பிறகே மற்றவா்களுடன் அவா் அடைக்கப்பட்டாா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு நேரடியாக தலையிட முடியாத சூழலை, அதிகார வா்க்கம் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பழைய வழக்குகளை எல்லாம் மீண்டும் கையில் எடுத்து தொடா்ந்து இவா்களை சிறையில் அடைக்கும் அணுகுமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.5 சதவீதத்தில் இருந்து சுமாா் 5.6 சதவீதமாகக் குறையும் அபாயம் உள்ளது. இதை எதிா்த்து தமிழக மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்திருப்பதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இதர மாநிலங்களுக்கு இணையான சதவீதத்தில் தமிழகத்துக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இதில் குறையீடுகள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தற்போது நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடா் முற்றிலும் அவசியமற்றது. 2029-ஆம் ஆண்டு அமலுக்கு வரவுள்ள மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை, வரவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவை தோ்தல்களில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும், பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவும் மட்டுமே பாஜக அரசு அவசர அவசரமாக நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை கொண்டு வருகிறது என்றாா்.