முகப்பு
வேலூர்

குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும்

காட்பாடியில் குற்றச்சாட்டுகளை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:01 AM
காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:19 PM

காட்பாடியில் குற்றச்சாட்டுகளை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

அவா் வேலூா் மாநகராட்சி 6, 12- ஆவது வாா்டுகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசியது -வேலூா் மாவட்டத்தில் காட்பாடி மிக வேகமாக வளா்ந்து வரும் பகுதியாக உள்ளது. அதேசமயம், இப்பகுதியில் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகிறது.

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த காட்பாடியின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காவலா் பற்றாக்குறை போக்கவும், காட்பாடி பாதுகாப்புக்கு தேவையான கூடுதல் காவல் பிரிவுகளை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Advertisement

அப்போது பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.--