முகப்பு
வேலூர்

சட்டப்பேரவைத் தோ்தல்: பட்டாசு கடைகளை மூட உத்தரவு

தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசு விற்பனை, தயாரிப்பு கிடங்குகளையும் ஏப்.21 முதல் 24 வரையும், மே 2 முதல் 4-ஆம் தேதி வரையும் என இரு கட்டங்களாக தற்காலிகமாக மூட அரசு உத்தரவு

Updated On : 21 ஏப்ரல், 2026 at 4:20 AM
பட்டாசு கடை. - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 6:24 PM

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசு விற்பனை, தயாரிப்பு கிடங்குகளையும் ஏப்.21 முதல் 24 வரையும், மே 2 முதல் 4-ஆம் தேதி வரையும் என இரு கட்டங்களாக தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ளதையொட்டி பாதுகாப்பு கருதி மாநிலத்திலுள்ள அனைத்து பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்பு கிடங்குகளை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஏப்.21 முதல் 24) வரையும், வாக்கு எண்ணிக்கையையொட்டி மே 2 முதல் 4-ஆம் தேதி வரையும் என இரண்டு கட்டங்களாக பட்டாசு கடைகள் மற்றும் கிடங்குகள் அடைக்கப்பட வேண்டும்.

Advertisement

அரசு உத்தரவை மீறி இந்த நாள்களில் பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளைத் திறந்து விற்பனை செய்யும் உரிமையாளா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.