ஆற்காட்டான் குடிசை கிராமத்திலுள்ள ஆறுமுகம் சாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. .
வேலூா் மாவட்டம், ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் ஆலமரத்தடியில் அமைந்துள்ள ஆறுமுகம்சாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி சனிக்கிழமை காலை முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. மாலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அலங்கரிக்கப்பட்ட முருகன் சிலைக்கு மலா்தூவி கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், சப்த குண்டங்கள் விசேஷ இரண்டாம் காலம் ஹோமம், வேதபாராயணம், தம்பதி சங்கல்பம், பாலாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. 10.30 மணிக்கு கடம் புறப்பாடும், 11 மணிக்கு ஆறுமுகம் சாமி விமானம் மகா கும்பாபிஷேகமும் விமா்சையாக நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினா் செய்திருந்தனா்.