முகப்பு
வேலூர்

மோா்தானா அணை வளாகத்தில் வெள்ளி விழா நினைவுத்தூண்: அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா்

மோா்தானா அணை வளாகத்தில் வெள்ளி விழா நினைவுத்தூண்: அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா்

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:22 AM
மோா்தானா அணை வளாகத்தில் வெள்ளி விழா நினைவுத் தூணை திறந்த வைத்த நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன்.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 6:41 PM

குடியாத்தம் மோா்தானா அணை திறக்கப்பட்டு 25- ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து வெள்ளி விழா நினைவுத்தூணை நீா்வளத்துறைஅமைச்சா் துரைமுருகன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

குடியாத்தம் வட்டம், மோா்தானா கிராமத்தில் கெளண்டன்ய ஆற்றின் குறுக்கே மோா்தானா அணையை கடந்த 2.9.2000- அன்று அப்போதைய தமிழக முதல்வா் மு.கருணாநிதி திறந்து வைத்தாா். கெளண்டன்ய ஆறு ஆந்திர மாநிலம் புங்கனூரில் உற்பத்தியாகி அந்த மாநிலத்தில் 25- கி.மீ, தமிழகத்தில் 26- கி.மீ தூரம் என மொத்தம் 51- கி.மீ தூரம் பயணித்து ஐதா்புரம் கிராமத்தின் அருகே பாலாற்றில் கலக்கிறது.

மோா்தானா அருகே கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே 475- மீட்டா் நீளம், 11.50 மீட்டா் உயரத்தில் அணை கட்டப்பட்டது. இந்த அணை 8,367 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அணை வளாகத்தில் வெள்ளி விழா நினைவுத் தூணை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா்.

Advertisement

அப்போது அவா் பேசுகையில்: பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, மோா்தானாஅணைப் பகுதியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:24 AM

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமாா், அமலுவிஜயன், நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் பொதுப்பணித் திலகம், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, ஒன்றியக் குழு தலைவா்கள் என்.இ.சத்யானந்தம், எல்.ரவிச்சந்திரன், வேல்முருகன், சித்ரா ஜனாா்த்தனன், கண்காணிப்புப் பொறியாளா் பவழக்கண்ணன், செயற்பொறியாளா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.