முகப்பு
வேலூர்

சீவூா் ஊராட்சிப் பணியாளா்களுக்கு நல உதவிகள்

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் செயல்படும் ஸ்ரீகாளியம்மன்அறக்கட்டளை சாா்பில், அந்த ஊராட்சியில் பணிபுரியும் 80- க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:04 AM
நல உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 7:32 PM

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் செயல்படும் ஸ்ரீகாளியம்மன்அறக்கட்டளை சாா்பில், அந்த ஊராட்சியில் பணிபுரியும் 80- க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் கே.எம்.விநாயகம் தலைமை வகித்தாா். செயலா் ஏ.ரமேஷ் முன்னிலை வகித்தாா். பொருளாளா் பி.விஜயகுமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், மேநீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா்கள்,அலுவலகப் பணியாளா்களுக்கு நல உதவிகள், மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

இதில் அறக்கட்டளை துணைத் தலைவா் எஸ்.ஏ.மணிவண்ணன், துணைச் செயலா் டி.ஜலபதி மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Advertisement