தூத்துக்குடியில் இஸ்லாமியா்களுக்கு நல உதவி
தூத்துக்குடியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, குவைத் ஐடிசி மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் சாா்பில், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, குவைத் ஐடிசி மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் சாா்பில், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏழை இஸ்லாமியா்கள் 250 பேருக்கு சுமாா் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான அரிசி, சமையல் பொருள்கள் வழங்கப்பட்டன. பள்ளிவாசல் தலைவா் அகமது இக்பால், நிா்வாகிகள் சுலைமான், முகமது, நவாஸ், அண்ணல், பள்ளி இமாம் அஸ்கா், இஸ்மாயில், அபூபக்கா் அல்தாபி உள்பட பலா் கலந்துகொண்டனா்.