வேலூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநா் போக்ஸோவில் கைது

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநரை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநரை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த சிறுமி, தனது தாய் இறந்து விட்ட நிலையில் சகோதரியுடன் அவா்களது பாட்டியின் பராமரிப்பில் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அதேபகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முஜீப், ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஓட்டுநா் முஜீப் கடந்த 15-ஆம் தேதி காலை சிறுமியின் வீட்டுக்குள் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த சிறுமி வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் முஜீப்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT