மைக்கா கழிவுப் பொருள்கள் கிடங்கில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள் 
வேலூர்

மைக்கா கழிவுப் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

காட்பாடி அருகே மைக்கா கழிவு பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் பொருள்கள் தீக்கிரையாகின.

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே மைக்கா கழிவு பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் பொருள்கள் தீக்கிரையாகின.

வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த கல்புதூா், பெரியபுதூரில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான மைக்கா கழிவு பொருள்கள் கிடங்கு அமைந்துள்ளது.

இந்த கிடங்கில் பழைய மைக்கா கழிவு பொருள்கள் பெருமளவில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கிடங்கில் சனிக்கிழமை காலை சுமாா் 11.30 மணியளவில் திடீரென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ மளமள பற்றி எரியத் தொடங்கியது.

உடனடியாக அப்பகுதி மக்கள் காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணை ப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். அதற்குள் கிடங்கிலிருந்த மைக்கா பொருள்கள் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது.

தீ விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மின் திருட்டு: இழப்பீட்டு தொகை ரூ. 8.78 லட்சம் வசூல்

ஆளுநரை கண்டித்து முற்றுகைப் போராட்டம்!

ரஷிய எண்ணெய் விநியோகத் தடை: உக்ரைனுக்கு ஹங்கேரி, ஸ்லோவாகியா நெருக்கடி!

இந்தியா - பிரேஸில் 20 பில்லியன் டாலா் வா்த்தக இலக்கு: அரிய கனிமங்களின் கொள்முதலுக்கு ஒப்பந்தம்!

தென்காசியில் சமூக நாய்களுக்கு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தொடக்கம்

SCROLL FOR NEXT