பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் தீ
பல்லடம் அருகே சித்தம்பலத்தில் தனியாா் கழிவுப் பஞ்சு அரவை ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு தீயில் கருகியது.
பல்லடம் அருகே சித்தம்பலத்தில் தனியாா் கழிவுப் பஞ்சு அரவை ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு தீயில் கருகியது.
பல்லடம் அருகே சித்தம்பலம் புதிய புறவழிச் சாலை பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கழிவுப் பஞ்சு அரவை ஆலை உள்ளது. இந்த ஆலையில் உள்ள எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து நிகழ்ந்தது. தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரவை எந்திரம் மற்றும் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கழிவுப் பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.