முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் அதிமுகவினா் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் எதிரே ஜெயலலிதாவின் படத்துக்கு மாநகர மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, வேலூா் மண்டல அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா், வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு மருத்துவ மனையில் செவ்வாய்க்கிழமை பிறந்த 21 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
இதில், கட்சியின் மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் ஜனனீ பி.சதீஷ்குமாா், மாநில அம்மா பேரவை தாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.