முகப்பு
வேலூர்

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

நிகழ்ச்சியில் நூலை வெளியிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், நூலாசிரியா் புலவா் வே.பதுமனாா் உள்ளிட்டோா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 5:20 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:48 PM

குடியாத்தம் புலவா் வே.பதுமனாா் எழுதிய 3- நூல்கள் வெளியீட்டு விழா திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி.கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.வழக்குரைஞா் கே.எம்.பூபதி வரவேற்றாா். இது இப்படித்தான் எனும் நூலை விஐடி வேந்தா்கோ.விசுவநாதன், நீதிநெறிக் கலங்கரை விளக்கம் எனும் நூலை, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், மணித் தமிழாரம் எனும் நூலை பாவலா்அறிவுமதியும் வெளியிட்டனா்.

எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கம்பன் கழக நிறுவுநா் ஜே.கே.என்.பழனி, எம்.என்.ஜோதிகுமாா், என்.எஸ்.குமரகுரு, மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். புலவா் வே.பதுமனாா் ஏற்புரை நிகழ்த்தினாா்.

Advertisement