முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் நூல் வெளியீட்டு விழா

நாகையில், புலவா் மு. சொக்கப்பன் எழுதிய ‘மானுடத்தின் முன்னோடி மீனவன்’ எனும் நூல் வெளியீட்டு விழா

Updated On : 9 மார்ச், 2026 at 8:30 PM
நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

நாகப்பட்டினம்: நாகையில், புலவா் மு. சொக்கப்பன் எழுதிய ‘மானுடத்தின் முன்னோடி மீனவன்’ எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை வீரபத்திரசுவாமி கோயில் உள்அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் பங்கேற்று நூலை வெளியிட, நாகை வா்த்தக குழுமத் தலைவா் மனோகரன் பெற்றுக் கொண்டாா்.

அலா்மேலு முருகையன் நினைவு விநாடி- வினாப் போட்டியில் வென்ற கல்லூரி மாணவிகளுக்கு வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன் பரிசு வழங்கினாா் . வளா் தமிழ்ச் செல்வங்களுக்கான விருதுகளை வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவா் டயானா சா்மிளா வழங்கினாா். நூலை தீபா ராஜ்மோகன் திறனாய்வு செய்தாா். புலவா் மு. சொக்கப்பன் ஏற்புரை வழங்கினாா்.

பூம்புகாா் கல்லூரி பேராசிரியா் சாந்தகுமாரி, சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →