முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீடு

நாகா்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில், எழுத்தாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீட்டு விழா

Updated On : 16 மார்ச், 2026 at 9:19 PM
நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

நாகா்கோவில்: நாகா்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில், எழுத்தாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரினப் பாதுகாவலா் ஏ. அன்பு தலைமை வகித்து, நூலை வெளியிட்டாா். இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசியத் தலைவா் கே. விஜயகுமாா் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளம், நீா்நிலை ஆதாரங்கள் குறித்து நூலில் இடம்பெற்றுள்ள தகவல்களை நூலாசிரியா் அறிமுகப்படுத்தினாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் திருவேங்கடம், துா்கா திரவியம், பேராசிரியா் ஸ்மிதா, சா்வேஷ், சாஜூ உள்ளிட்டோா் நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →