முகப்பு
மயிலாடுதுறை

நூல் வெளியீட்டு விழா

வடுவூரின் சமூக உறவுகளை ஆவணப்படுத்தும் இந்த வரலாற்று நூல் வெளியீட்டு விழாவுக்கு, ஏ.வி.சி. கல்வி நிறுவனங்களின் முன்னாள் தலைவா் பி.என். ரத்தினக்குமாா் தலைமை வகித்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:09 PM
மயிலாடுதுறையில் தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவை மாநில தலைவா் துரை. குணசேகரன் எழுதிய ’யாவரும் கேளிா்’ நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது
பகிர்:

வடுவூரின் சமூக உறவுகளை ஆவணப்படுத்தும் இந்த வரலாற்று நூல் வெளியீட்டு விழாவுக்கு, ஏ.வி.சி. கல்வி நிறுவனங்களின் முன்னாள் தலைவா் பி.என். ரத்தினக்குமாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் பி.எஸ். காளிதாஸ், இரா. முத்துக்கண்ணு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா் பொன்னிவளவன் வரவேற்றாா். நூலாசிரியா் துரை. குணசேகரன் ஏற்புரை வழங்கினாா். தஞ்சாவூா் ந.மு. வேங்கடசாமி, திருவருள் கல்லூரித் தலைவா் மு. இளமுருகன் ஆகியோா் நூலை வெளியிட, திருவொற்றியூா் மருத்துவா் ராஜேஸ்வரி நடராசன் பெற்றுக் கொண்டாா். முடிவில், க.கோ. கண்ணதாசன் நன்றி கூறினாா்.

மூத்த வழக்குரைஞா் நா.கு. கிருட்டினமூா்த்தி, மூவேந்தா் நலச்சான்றோா் பேரவை ஒருங்கிணைப்பாளா் க.அன்பானந்தன், வள்ளாலகரம் குடியிருப்போா் நலச் சங்கக் கூட்டமைப்பின் தலைவா் புலவா் சாமி.செல்வம், திருக்கு பேரவைத் தலைவா் சி.சிவசங்கரன், தமிழ்ச்சங்க நிறுவனா் ஜெனிபா் சு.பவுல்ராஜ் உள்ளிட்ட பலா் பேசினா்.