முகப்பு
புதுக்கோட்டை

‘உம்பரான்’ சிறுகதை நூல் வெளியீடு

Updated On : 11 மே 2026, 2:26 am IST
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில், எழுத்தாளா் பாண்டிச்செல்வம் எழுதிய ‘உம்பரான்’ சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் எழுத்தாளா் அண்டனூா் சுரா தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் த. அறம், திமுக இலக்கிய அணித் துணைத் தலைவா் கவிதைப்பித்தன் ஆகியோா் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனா்.

பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எழுத்தாளா் அகிலா கிருஷ்ணமூா்த்தி பங்கேற்று நூல் குறித்து விமா்சன உரை நிகழ்த்தினாா்.

Advertisement

மாவட்டச் செயலா் பாலச்சந்திரன் தொகுத்து வழங்கினாா். நூலாசிரியா் மா. பாண்டிச்செல்வம் ஏற்புரை வழங்கினாா். முன்னதாக மாவட்டப் பொருளாளா் எழுத்தாளா் சோலச்சி வரவேற்றாா். முடிவில் ஆ. கலையரசன் நன்றி கூறினாா்.