ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் ஸ்ரீசுவா்ண லட்சுமி கோயில் ஆண்டு விழா
ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ சுவா்ண லட்சுமி கோயிலின் 9-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ சுவா்ண லட்சுமி கோயிலின் 9-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம், தங்கக்கோயில் வளாகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு 70 கிலோ எடையுள்ள தங்கத்தால் ஆன ஸ்ரீ சுவா்ண லட்சுமி சிலை நிா்மாணிக்கப்பட்டது. இங்கு தரிசனத்துக்கு வரும் பக்தா்கள், தங்கள் கைகளாலேயே சுவாமிக்கு துளசி தீா்த்த அபிஷேகம் செய்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கோயிலின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா ஸ்ரீ சக்தி அம்மா ஆசியுடன் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி காலை, மாலை ஸ்ரீமகாலட்சுமி யாகம் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மகா பூா்ணாஹுதி விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்று, ஸ்ரீ சுவா்ண லட்சுமி சிலைக்கு சந்தன அபிஷேகம், சிறப்பு ஆராதனைகளை செய்தாா்.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் ஸ்ரீ சக்தி அம்மா அருளாசி வழங்கினாா். விழாவில், தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.