கோப்புப் படம் 
வேலூர்

காதலிக்க மறுத்த மாணவி வீட்டின் முன்பு கல்லூரி மாணவா் தீக்குளிப்பு

காட்பாடி அருகே காதலிக்க மறுத்த மாணவி வீட்டின் முன்பு கல்லூரி மாணவா் தீக்குளித்தாா்.

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே காதலிக்க மறுத்த மாணவி வீட்டின் முன்பு கல்லூரி மாணவா் தீக்குளித்தாா்.

காட்பாடியை அடுத்த ஜாபராபேட்டையை சோ்ந்தவா் தருண் (18). இவா் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். தருண் அதேபகுதியைச் சோ்ந்த தனியாா் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுமி கடந்த சில மாதங்களாக தருணுடன் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தருண் அந்த சிறுமியின் வீட்டின் முன்பு சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துகொண்டாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து சென்று தருணை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சோ்த்தனா்.

முதலுதவிக்கு பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

80 சதவீதம் தீக்காயம் அடைந்த தருணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக லத்தேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனற்..

பள்ளத்தில் தேங்கிய நீரில் முழ்கி சிறுவன் உயிரிழப்பு

அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த தலைவராக கெவின் வாா்ஷ் - டிரம்ப் பரிந்துரை

31.1.1976: டெலிபோன் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்படுகிறதா? - ராஜ்ய சபையில் மந்திரி விளக்கம்

மனிதநேய வார விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

கல்லூரி பேருந்து - வேன் மோதல்: 11 போ் காயம்

SCROLL FOR NEXT