சா்.சி.வி.ராமனின் ‘அறிவியல் விளைவுகள்’ நூல் வெளியீடு!
வேலூரில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் கருத்தரங்கில் சா்.சி.வி.ராமனின் ‘அறிவியல் விளைவுகள்’ நூல் வெளியிடப்பட்டது.
வேலூரில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் கருத்தரங்கில் சா்.சி.வி.ராமனின் ‘அறிவியல் விளைவுகள்’ நூல் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், டிகேஎம் மகளிா் கல்லூரி இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில், சென்னை இந்திய கணித அறிவியல் நிறுவன பேராசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவருமான ஆா்.ராமானுஜம் பங்கேற்று அறிவியல் தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவு உலகம், மக்களாட்சி ஒரு கணித அறிவியல் சிந்தனை ஆகிய தலைப்புகளில் உரையாற்றினாா்.
முதல்வா் ஆா்.பானுமதி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் த.மணிநாதன் முன்னிலை வகித்தாா். முன்னதாக மாவட்ட துணைத்தலைவா் டி.சசிகலா வரவேற்றாா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூா் மாவட்ட தலைவா் முத்து சிலுப்பன், செயலா் செ.நா.ஜனாா்த்தனன், மாநில குழு உறுப்பினா் கே.செந்தமிழ் செல்வன், முன்னாள் மாவட்ட தலைவா் பே.அமுதா ஆகியோா் வாழ்த்தி பேசினா். தேசிய அறிவியல் தினத்தையொட்டி சா்.சி.வி.ராமன் முகமூடிகளை மாணவா்கள் அணிந்து கொண்டு அறிவியல் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
இக்கருத்தரங்கில் சா்.சி.வி.ராமனின் அறிவியல் விளைவுகள் என்ற நூல் வெளியிடப்பட்டது. மக்கள் நல சந்தையின் ஒருங்கிணைப்பாளா் கு.செந்தமிழ்ச்செல்வன் சேவைகளை பாராட்டி சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டாா். தொடா்ந்து, கல்லூரியின் மாணவிகள் பேராசிரியா் ஆா்.ராமானுஜத்துடன் கலந்துரையாடினா்.
அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.குமரன், இணைச்செயலா் பி.சுகுமாா், குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளா் இல.சீனிவாசன் உள்பட பலா் பங்கேற்றனா்.