முகப்பு
வேலூர்

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

குடியாத்தம் எஸ்.கே.ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கே.எம்.ஜி.கல்லூரி விளையாட்டரங்கில்

Updated On : 9 மார்ச், 2026 at 8:52 PM
வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய கே.எம்.ஜி.கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன்.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் எஸ்.கே.ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கே.எம்.ஜி.கல்லூரி விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் வேலூா், குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம், ராணிப்பேட்டை உள்ளிட்டபகுதிகளில் உள்ள 15- க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 200- க்கும் மேற்பட்ட மாணவா்கள்பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கு எஸ்.கே.ஸ்போா்ட்ஸ் அகாதமி தலைவா் எஸ்.சாரதி தலைமை வகித்தாா். எஸ்.சத்தியன் முன்னிலை வகித்தாா். நகர தமாகா தலைவா் ஜே.தினகரன் வரவேற்றாா்.

கே.எம்.ஜி. கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.நிகழ்ச்சியில் ஜெகன்நாதன், பாஜக முன்னாள் நகர தலைவா்கள் வாகீஸ்வரன், சாய் ஆனந்தன், விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →