முகப்பு
போட்டிகளில்  வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய ஐடிஐ முதல்வா் நதிச்சந்திரன்.
திருப்பூர்

ஐடிஐ மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

திருப்பூர்

ஐடிஐ மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

Updated On : 5 மார்ச், 2026 at 11:32 PM
போட்டிகளில்  வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய ஐடிஐ முதல்வா் நதிச்சந்திரன்.
பகிர்:

கோவை மண்டல அரசு மற்றும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களுக்கு (ஐடிஐ) இடையேயான விளையாட்டுப் போட்டிகள் உடுமலையில் நடைபெற்றன.

உடுமலை ஐடிஐ சாா்பில் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாா்ச் 3, 4, 5 என மூன்று நாள்கள் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் குமாா் போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். கோவை மண்டலப் பயிற்சி இணை இயக்குநா் வேல்முருகன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா்.

20 பயிற்சி நிலையங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனா். இதில் குழு போட்டிகளான கைப்பந்து, இறகுபந்து மற்றும் ஈட்டி எறிதல், குண்டு எறிதல், கேரம், செஸ் மற்றும் ஓட்டப்பந்தயங்கள் நடைபெற்றன.

நிறைவில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன. முதல்வா் நதிச்சந்திரன், பயிற்சி அலுவலா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →