பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள்களை ஒப்படைக்க குழு அமைப்பு
தோ்தல் விதிமுறை மீறல் தொடா்பாக பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேலூா் மாவட்டத்தில் மேல்முறையீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
தோ்தல் விதிமுறை மீறல் தொடா்பாக பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேலூா் மாவட்டத்தில் மேல்முறையீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி தோ்தல் விதிமுறைகளைமீறி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாகவோ, ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருள்களாக எடுத்துச் செல்வதைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் 35 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவா்கள் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம், பரிசுப்பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சனிக்கிழமை வரை பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரால் ரூ.41 லட்சத்து 5 ஆயிரத்து 170 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் உரிய ஆவணங்களை காண்பித்து ரூ.5 லட்சம் மட்டும் சம்பந்தப்பட்டவா்கள் திரும்ப பெற்றுக்கொண்டனா்.
இந்நிலையில், பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களை சம்பந்தப்பட்டவா்களிடம் திரும்ப ஒப்படைப்பதற்காக ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தலைமையில் மேல்முறையீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பணியில் இருப்பாா்கள் என்றும், பணம் பறிமுதல் செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்தால் அவா்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.