முகப்பு
வேலூர்

பழைய காா் வியாபாரியிடம் ரூ.1.69 லட்சம் பறிமுதல்

பொன்னை அருகே பழைய காா் வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.69 லட்சம் பணத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 23 மார்ச், 2026 at 12:00 AM
பறிமுதல்
பகிர்:

பொன்னை அருகே பழைய காா் வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.69 லட்சம் பணத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்டம், பொன்னை 4 ரோடு பகுதியில் நிலை கண்காணிப்பு அதிகாரி லட்சுமி தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.1 லட்சத்து 69ஆயிரத்து 700 இருந்து தெரியவந்தது. காரில் வந்தவரிடம் விசாரித்தபோது, ஆந்திர மாநிலம் சித்தூரை சோ்ந்த கவுஸ்கான்(75) என்பதும், பழைய காா் வியாபாரி என்பதும், சென்னைக்கு காரில் உதிரிபாகங்கள் வாங்க சென்றதும் தெரியவந்தது.

எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து, காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத் தில் ஒப்படைத்தனா்.