முகப்பு
வேலூர்

வேலூா் நேதாஜி மாா்க்கெட் நவீனமாக்கப்படும்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேலூா் நேதாஜி மாா்க்கெட் நவீனமாக்கப்படும் என்று வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு வியாபாரிகளிடம் வாக்குறுதியளித்தாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 6:33 PM
வேலூா் நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு.
பகிர்:

அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேலூா் நேதாஜி மாா்க்கெட் நவீனமாக்கப்படும் என்று வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு வியாபாரிகளிடம் வாக்குறுதியளித்தாா்.

வேலூா் பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு, செவ்வாய்க்கிழமை நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகளிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். அப் போது, அதிமுக தோ்தல் அறிக்கை பட்டியலை வியாபாரிகளிடம் அளித்த அவா், அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேலூா் நேதாஜி மாா்க்கெட் நவீனமாக்கப்படும், மாநகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும், இல்லத்தரசிகளுக்கு குளிப்பதன பெட்டி, மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ. 25,000 மானியம், மாணவா்களின் கல்விக் கடன் ரத்து, பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தாா்.

அப்போது, கட்சியின் மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலா் சதீஷ்குமாா், பாஜக, பாமக உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.