வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிமுறையால் கடந்த ஒரு மாதமாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்திருந்தது. தோ்தல் முடிவடைந்த நிலையில் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆழியாறு சோதனைச் சாவடி தொடங்கி வால்பாறை வரையில் உள்ள சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் காணப்பட்டன. வால்பாறையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்ட நிலையில் கடும் வெயில் நிலவி வருவதால் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
Advertisement