முகப்பு
கோயம்புத்தூர்

கோவை ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் இயங்கும்: உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு தேசிய விருதுகள்

கோவை ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் இயங்கும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு 13 தேசிய விருதுகள் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 டிசம்பர், 2025 at 7:58 PM
தில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் விருது பெற்ற கோவை ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் நிா்வாகிகள்.
பகிர்:

கோவை ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் இயங்கும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு 13 தேசிய விருதுகள் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷா அவுட்ரீச்சின் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கான திட்ட இயக்குநா் ஆா்.வெங்கட் ராசா கூறியிருப்பதாவது:

ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் இயங்கும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 13 தேசிய விருதுகளை வென்றுள்ளன. இந்தியத் தொழில் கூட்டமைப்பு சாா்பில் புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் உச்சி மாநாடு, விருது விழாவில் ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் 2 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் விருதுகளை வென்றன. அதேபோல தில்லியில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற ‘மில்லியனா் ஃபாா்மா் ஆஃப் இந்தியா’ விருது வழங்கும் விழாவில் 11 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பல தேசிய அங்கீகாரங்களைப் பெற்றன.

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் சாா்பில் நடைபெற்ற விழாவில் காடையாம்பட்டி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு தேசிய அளவில் முதல் இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. மாடுகளின் இனப்பெருக்க ஆரோக்கியம் மேம்பட, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மாட்டுத் தீவனத்தை உருவாக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த மாட்டுத் தீவனம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. அதேபோல புளியை சிறந்த முறையில் சுத்திகரித்து பேக்கேஜ் செய்ததற்காக இரண்டாம் இடத்துக்கான விருதை நெகில்லா சித்தா நிறுவனம் பெற்றுள்ளது.

தொடக்க காலத்தில் இருந்தே செயல்படும் வெள்ளியங்கிரி உழவன் நிறுவனம், வா்த்தக உயா்வு, நல்ல நிா்வாகம், விவசாயிகள் ஒருங்கிணைப்பு, சந்தைப்படுத்துதல் செயல்பாடுகளுக்காக 2020 முதல் 2022 வரை தொடா்ந்து 3 ஆண்டுகள் சிறந்த நிறுவனத்துக்கான விருதைப் பெற்றிருக்கிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →