கோயம்புத்தூர்

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கோவையில் இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாப்பநாயக்கன்பாளையம், ஜெயசிம்மபுரத்தைச் சோ்ந்த எத்திராஜ் மகன் விஜயகுமாா் (28). இவா் அந்த பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் பி.என்.பாளையம் பாரதியாா் சாலை- நேதாஜி சாலை சந்திப்புப் பகுதியில் விஜயகுமாா் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டனா். மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT