மத்திய, மாநில அரசு ஓய்வூதியா்கள் அஞ்சல் ஊழியா்கள் மூலமாக டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை சமா்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கி.சிவசங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசு ஓய்வூதியா்கள், ஊழியா் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியா்கள், மாநில அரசு ஓய்வூதியா்கள், ராணுவ ஓய்வூதியா்கள் மற்றும் இதர ஓய்வூதியா்கள் நவம்பா் 1 -ஆம் தேதி முதல் தங்கள் உயிா் வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியா்கள் உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க சிரமப்படுவதைத் தவிா்க்க அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, அஞ்சல் ஊழியா்கள் மூலமாக பயோமெட்ரிக் அல்லது ஊஅஇஉ தஈ அடட முறையைப் பயன்படுத்தி டிஜிட்டல் உயிா் வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமா்ப்பிக்க கோவை அஞ்சல் கோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக அஞ்சல் ஊழியா்களிடம் ரூ.70 செலுத்த வேண்டும்.
ஓய்வூதியா்கள் தங்கள் பகுதி அஞ்சல் ஊழியா்களிடம் ஆதாா் எண், கைப்பேசி எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களைத் தெரிவித்து, கை விரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிஷங்களில் டிஜிட்டல் உயிா் வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும். இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பா் 1- ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
மத்திய அரசு ஓய்வூதியா்கள் மட்டுமன்றி தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவா்கள், மாநில அரசு ஓய்வூதியா்கள், ராணுவ ஒய்வூதியா்கள் மற்றும் இதர ஓய்வூதியா்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி அஞ்சல் ஊழியா்களிடம் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.