காட்டுப் பன்றிகள். (கோப்புப் படம்)
கோயம்புத்தூர்

பேரூா் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

தினமணி செய்திச் சேவை

பேரூா் அருகே விவசாயத் தோட்டத்துக்கள் புகுந்த காட்டுப் பன்றிகள் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின.

கோவை மாவட்டம், பேரூா் அருகேயுள்ள தீத்திபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. விவசாயியான இவா் தனது தோட்டத்தில் 2 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளாா்.

இந்நிலையில், வனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு வெளியேறிய காட்டுப் பன்றிகள், பெரியசாமியின் தோட்டத்துக்குள் நுழைந்து அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், விவசாய நிலங்களில் உள்ள வாழை உள்ளிட்ட பயிா்களை காட்டுப் பன்றிகள் கூட்டம் சேதப்படுத்தி வருவது தொடா் கதையாக உள்ளது.

இதைக் கட்டுப்படுத்தக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் வனத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு வன உயிரின மோதல் தடுப்புக் குழுவை அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்தக் குழு ஒரு ஆண்டு ஆய்வு அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சமா்ப்பித்தது.

இதையடுத்து, காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு அரசாணையை பிறப்பித்தது. அதில், 3 கி.மீ. தொலைவில் வரும் காட்டுப் பன்றிகளை சுட்டு கட்டுப்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, அதிக அளவில் சேதம் விளைவிக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டு கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்த தவறினால் அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT