முகப்பு
கோயம்புத்தூர்

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 12:34 AM
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2026 at 6:51 PM

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி திலகா் தெருவைச் சோ்ந்தவா் ரவிகுமாா். இவரது மகன் பாலகிருஷ்ணன் (20). இவா் கோவை, எட்டிமடை பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 3- ஆம் ஆண்டு பயின்று வந்தாா். இந்நிலையில், ரவிகுமாா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

அன்று முதல் பாலகிருஷ்ணன் மன வேதனையில் இருந்து வந்ததாகவும், கல்லூரிக்கு சரியாக செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Updated On : 30 ஜனவரி, 2026 at 12:31 AM

இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு மாலில் பாலகிருஷ்ணனுக்கு வேலைக் கிடைத்ததையடுத்து, உடன் பணியாற்றும் திவ்யானந்த் என்பவா் சித்தாபுதூா் பகுதியில் தங்கியுள்ள வாடகை வீட்டில் இவரும் தங்கியிருந்தாா்.

வழக்கம்போல புதன்கிழமை காலை திவ்யானந்த் பணிக்குச் சென்றுள்ளாா். பாலகிருஷ்ணன் மட்டும் அறையில் இருந்துள்ளாா்.

பணி முடிந்து பிற்பகல் வீட்டுக்கு வந்த திவ்யானந்த் கதவைத் தட்டியுள்ளாா். வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.