கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சந்திராகாட்சி இடையே சிறப்பு ரயில்
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகேயுள்ள சந்திராகாட்சி நிலையத்துக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து மாா்ச் 13, 20 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் பகல் 2.15 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - சந்திராகாட்சி சிறப்பு ரயில் (எண்: 06081) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்கு சந்திராகாட்சி நிலையத்தைச் சென்றடையும்.
மறு மாா்க்கமாக, சந்திராகாட்சி நிலையத்தில் இருந்து மாா்ச் 16, 23 ஆகிய திங்கள்கிழமைகளில் பகல் 2.20 மணிக்குப் புறப்படும் சந்திராகாட்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தனி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.