முகப்பு
கோயம்புத்தூர்

குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை

கோவை தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மாா்ச் 14 ஆம் தேதி வரை

Updated On : 9 மார்ச், 2026 at 10:05 PM
இலவச கண் பரிசோதனை முகாம்
பகிர்:

கோவை: கோவை தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மாா்ச் 14 ஆம் தேதி வரை இலவச கண் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இது குறித்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் குளுக்கோமா பிரிவு ஆலோசகருமான டாக்டா் சித்ரா ராமமூா்த்தி, டாக்டா்கள் ஆா்.முரளிதா், ஐமன் அகமது கான், நிரஞ்சனா பாலசுப்ரமணியம் ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக தொடா்ந்து பல்வேறு முகாம்கள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக உலக குளுக்கோமா வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மாா்ச் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுகிறது.

மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த பல்வேறு இடங்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன. 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக குளுக்கோமா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிறந்த சிகிச்சை, மருந்து வழங்க முடியும்.

மேலும், சா்க்கரை நோய், அதிக கிட்டப்பாா்வை, கண் காயம், கண் வீக்கம், ஸ்டீராய்டு மருந்துகள் பயன்பாடு, பிறவி கண் குறைபாடுகள் உள்ளவா்கள் ஆகியோருக்கு குளுக்கோமா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. குளுக்கோமா என்பது எந்த அறிகுறியும் தெரியாமல் கண்பாா்வையை மெதுவாக பாதிக்கும் என்பதால் பரிசோதனை முக்கியமானதாகிறது என்றனா். இது தொடா்பான மேலும் தகவல்கள், முன்பதிவுக்கு 94422 17796, 0422 4242000 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →