துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனதலைவராக எம்.ஆர்.சுப்பையன் பொறுப்பேற்பு
கோவை துடியலூரில் உள்ள தமிழ்நாட்டின் முதன்மை கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடந்தது.
கோவை துடியலூரில் உள்ள தமிழ்நாட்டின் முதன்மை கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடந்தது.
நிகழ்ச்சியில், சிவகுமார் வரவேற்றார்.
தலைவராக எம்.ஆர்.சுப்பையன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து துணைத் தலைவராக ஆர்.செல்வராஜன், நிர்வாக இயகுநர்களாக சூரியா ராமசாமி, யு.ஆர்.கிருஷ்ணன், சிவகுமார், தாமோதரன், ஜெகநாதன், சந்திரகலா, ராஜேஸ்வரி, தனலட்சுமி, அனுசுயா ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், கோவை மாநகர மேயர் செ.ம.வேலுசாமி கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்.
முன்னாள் தலைவர் துரைசாமி, வங்கி செயலாளர் அமராவதி, கே.பி.ராஜ், பேரூராட்சித் தலைவர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.வி.என்.ஜெயராமன், ஆனந்தன், சேர்மன் வீரபாண்டி விஜயன், ஊராட்சித் தலைவர்கள் சரவணகுமார், இராமகிருஷ்ணன், ரவி, டி.என்.வேலுச்சாமி, உஷாமாலு, வி.கே.வி.சுந்தர்ராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அப்பையன், பூக்கடை ரவிச்சந்திரன், குருந்தாசலம், ரகுநாதன், பொ.சண்முகம், ரங்கராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், கவிச்சந்திரமோகன், அன்னபூரணி, முன்னாள் சேர்மன் கோவனூர் துரைசாமி, மாணிக்கம், முன்னாள் இயக்குநர் தங்கவேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.