கோயம்புத்தூர்

பெண்ணிடம் நகைப்பறிப்பு

DIN

கோவையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து  4.5 பவுன் நகையை மர்ம நபர்கள் திங்கள்கிழமை பறித்துச் சென்றனர். 
கோவை,  சாய்பாபா காலனி ராமலிங்கம் சாலையைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மலர்விழி (33). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில்,  வழக்கம்போல் பணிமுடிந்து பாரதி பார்க் அருகே திங்கள்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென மலர்விழி அணிந்திருந்த 4.5 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில்,  சாய்பாபா காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT