கோயம்புத்தூர்

அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரங்கராஜ்,  சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் இன்னாசி முத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.
 இதில்,  காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு புதுச்சேரி அரசு இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும். முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் நிலுவையில் உள்ள தொகையை வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT