கோயம்புத்தூர்

நடந்து சென்ற பெண்களிடம்  நகைப் பறிப்பு

DIN

சூலூர் அருகே, நடந்து சென்ற பெண்களிடம் செவ்வாய்க்கிழமை மர்ம நபர்கள் நகையைப் பறித்துச் சென்றனர்.
பாப்பம்பட்டி, ஜானகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனலட்சுமி (50). இவர், தனது வீட்டின் அருகே  செவ்வாய்க்கிழமை மாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தனலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். 
மற்றொரு சம்பவம்:
பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி பவானி (45). இவர், தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக வெள்ளளூர் பிரிவு அருகே அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பவானி அணிந்திருந்த 2 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். 
இவ்விரு சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில் சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT