கோயம்புத்தூர்

விலைவாசி உயர்வைக் கண்டித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்

DIN

விலைவாசி உயர்வு, ரேஷன் மானியம் ரத்து போன்றவற்றைக் கண்டித்து கோவையில் சிஐடியூ அமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்தி பூங்கா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். 
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கை. அதன் விளைவாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து சிஐடியூ மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம்,  மாவட்ட பொறுப்புச் செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினார்.
மேலும், விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு  உருளை விலை உயர்வு ஆகியவற்றைச் சித்திரிக்கும் வகையில் காய்கறி மாலை அணிந்தும், எரிவாயு உருளையை தலையில் சுமந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.வேலுசாமி, எஸ்.மூர்த்தி, கே.மனோகரன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT