கோயம்புத்தூர்

24.வீரபாண்டி கிராமத்தில் வீட்டை தாக்கிய ஒற்றை யானை

DIN

துடியலூர் அருகே ஆனைகட்டி மலையடிவார கிராமமான வீரபாண்டி புதூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த வீட்டின் ஜன்னலை உடைத்து உணவுப் பொருள்களை தின்று சேதப்படுத்தியது.
இக்கிராமத்தில் அடிக்கடி யானைகள் புகுந்து பொருள்களை சேதப்படுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இவற்றின் நடமாட்டம் குறைந்திருந்தது.
இந்நிலையில், இக்கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானை, அங்குள்ள செல்வராஜின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை தூக்கிச் சென்று தின்றது.
சப்தம் கேட்டு எழுந்த செல்வராஜ், அருகில் வசிப்பவர்களுக்கு செல்லிடப்பேசியில் தகவல் அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT