கரடி தாக்கியதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை காயமடைந்தார்.
வால்பாறையை அடுத்த அய்யர்பாடி எஸ்டேட், 2-ஆவது டிவிஷன், 23-ஆம் நம்பர் தோட்டத்தில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஅருகில் உள்ள வனப் பகுதியில் இருந்து திடீரென வந்த கரடி, தோட்டத்தில் உரமிடும் பணியில் இருந்த மதுரை வீரன் (50) என்பவரைத் தாக்கியுள்ளது.
அதைக் கண்ட மற்ற தொழிலாளர்கள் கற்களை வீசி கரடியை அங்கிருந்து விரட்டியுள்ளனர். கரடி தாக்கியதில் வலது கால் பகுதியில் காயமடைந்த மதுரை வீரன் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.