கோயம்புத்தூர்

கார் மீது கல் வீச்சு

DIN

கோவையில் சக்திசேனா அமைப்பின்நிறுவனத் தலைவரான அன்புமாரியின் கார் மீது மர்ம நபர்கள் திங்கள்கிழமை இரவு கல் வீசித் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை, காளப்பட்டி சாலையில் உள்ள நேரு நகர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் அன்புமாரி (42). சக்திசேனா அமைப்பின் நிறுவனத் தலைவர்.
இவர், தொட்டிபாளையம் பிரிவில் இருந்து நேரு நகருக்கு திங்கள்கிழமை இரவு காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அன்புமாரியின் கார் மீது கல் வீசித் தாக்கினராம்.
இதில், காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்ததுடன், அன்புமாரிக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து, பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT