கோயம்புத்தூர்

நல்லாம்பாளையத்தில் பள்ளி மாணவிகள் இருவர் மாயம்: பெற்றோர் முற்றுகை

DIN

கோவை கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையத்தில் செயல்படும் உள்ள தனியார் பள்ளிக்கு வந்த இரண்டு குழந்தைகள் வெள்ளிக்கிழமை மாயமாகினர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். நல்லாம்பாளையத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் துடியலூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் ஸ்ரீலேகா 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்த ஸ்ரீலேகாவை சிறிது நேரத்தில் காணவில்லை. அதேவகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவி சந்தியாவையும் காணாவில்லை.
இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்தது. அவர்களும் வந்து பள்ளி வளாகத்திலும், நல்லாம்பாளையம் சுற்றுப்பகுதிகளில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்குள் வந்த குழந்தைகளை முறையாக பாதுகாப்புடன் பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை என கூறி முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாலை வரையில் இரண்டு குழந்தைகளும் கிடைக்கவில்லை. போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT