கோயம்புத்தூர்

ராவ் மருத்துவமனையின் புதிய கிளை: சரவணம்பட்டியில் 22-ஆம் தேதி திறப்பு

DIN

கோவை சரவணம்பட்டியில் ராவ் மருத்துவமனையின் புதிய கிளையான கேர் ஃபெர்ட்டிலிட்டி கிளினிக் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆஷா ஆர்.ராவ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
கடந்த 1953-ஆம் ஆண்டு முதல் கோவையில் பெண்களுக்கு பிரத்யேக மருத்துவ சிகிச்சை அளித்து வரும் ராவ் மருத்துவமனையின் 2-ஆவது கிளையான கேர் ஃபெர்ட்டிலிட்டி கிளினிக், சரவணம்பட்டி புரோம்னேட் டவரில் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது.
இந்த மருத்துவமனையை நடிகை பிந்து மாதவி திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார். திறப்பு விழாவை முன்னிட்டு மே 7-ஆம் தேதி வரையிலும் இலவச மருத்துவப் பரிசோதனை, கட்டண சலுகையில் அறுவை சிகிச்சைகள், சலுகைக் கட்டணத்தில் உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையின் தலைவர் ஆர்.ராவ், இயக்குநர் தாமோதர் ஆர்.ராவ், தீபிகா ஆர்.ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT