கோயம்புத்தூர்

பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

கோவை பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் 2018-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
அதன்படி, பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ இல்லாத 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை மற்றும் 11-ஆம் வகுப்பில் தமிழ் வழியில் கற்க விரும்பும் நலிவுள்ள மாணவர்கள் பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் சேரலாம்.
அவர்களுக்கு உணவு, தங்குமிடம், சீருடை, மருத்துவ வசதி, எழுது பொருள்கள், கணினிப் பயிற்சி , விளையாட்டுப் பயிற்சி என கல்லூரி படிப்பு முடியும் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மாணவர் விடுதியில் சேர விரும்புபவர்கள் பள்ளியின் செயலர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து ஏப்ரல் 28-ஆம் தேதி மாலைக்குள் வழங்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
மேலும், இது குறித்த விவரங்களுக்கு பூ.சா.கோ. சர்வஜன மேல்நிலைப் பள்ளிச் செயலர் அலுவலகத்தை நேரிலோ, 0422- 2572310, 99448 65628 எனும் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT