கோயம்புத்தூர்

பிஏ பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கலைத் திறன் போட்டி

DIN

பொள்ளாச்சி பிஏ பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கலைத்திறன்  போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
கல்லூரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். பி.ஏ.கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்து பேசுகையில்,  மாணவர்கள் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதுபோன்று,  கல்வியிலும் சிறந்துவிளங்கவேண்டும். கற்கும் பாடங்களைப் புரிந்துபடிக்கவேண்டும் என்றார்.
 சிறப்பு விருந்தினராக திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் பங்கேற்று பேசினார்.  இதைத் தொடர்ந்து, நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.  நிகழ்ச்சியில்,  நிர்வாக அலுவலர் பழனிசாமி,  பி.ஏ. கல்வியியல் கல்லூரி முதல்வர் சந்திராதேவி,  பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பொன்னம்பலம், துறைத் தலைவர்கள்,  பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் விஜய்பிரவின் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT