சூலூர் பகுதியில் தொடர் திருட்டுகளைக் கண்டறிய புதன்கிழமை தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சூலூர் அருகே கடந்த சில நாள்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. சூலூர் காவல் நிலையத்தில் காவலர் பற்றாக்குறை நிலவுவதால் இந்தத் திருட்டுகளைப் புலன் விசாரணை செய்ய முடியாமல் உள்ளனர். எனவே, கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் இத் திருட்டுகளை துப்புத் துலக்க தனிப்படை அமைத்துள்ளார். அந்த தனிப்படையில் கோவில்பாளையம் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், துணை ஆய்வாளர், சுல்தான்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு துணை ஆய்வாளர் இருவர் மற்றும் போலீஸார் இடம் பெற்றுள்ளனர்.