வால்பாறை பகுதியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடர்ந்து ஒரு வார காலம் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்யாமல் கடும் வெயிலாக காணப்படடது. இரவு நேரத்தில் மட்டும் குளிர்ச்சியாக இருந்த நிலையில், பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றம் தேயிலை உற்பத்திக்கு ஏதுவாக அமைந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. வால்பாறை பகுதியில் வெயில், மழை என அடிக்கடி ஏற்படும் மாற்றத்தால் ஏராளமானோருக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.