கோயம்புத்தூர்

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

ஆழியாறு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 

DIN

ஆழியாறு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 
ஆழியாறைச் சேர்ந்தவர்கள் முருகன் (36), துரைராஜ் (36). இருவரும் புதன்கிழமை கோட்டூரில் இருந்து ஆழியாறுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். முருகன் இருசக்கர வாகனத்தை ஓட்டினார். 
அப்போது, எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஆனைமலையை சேர்ந்த கிஷோர்குமார் (26), முருகன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். 
 இதில் பலத்த காயமடைந்த துரைராஜ், கிஷோர்குமார் ஆகியோர் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த முருகன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். இதுகுறித்து ஆழியாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT